இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் உபாலி லீலாரத்ன ( Upali Leelaratne ) காலமானார்.
இவர் , நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளையும் நாவல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் ( ஜெயகாந்தன் , கு. சின்னப்பபாரதி முதலான தமிழக எழுத்தாளர்களின் நூல்களும் இவற்றுள் அடங்கும் ). சிறுகதைத் தொகுதிகள் , நாவல்கள் தவிர பூலான்தேவி , உமர் முக்தார் போன்ற நூல்களும் இவரால் சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.