ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதுஅறிவிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து தமது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
அதேவேளை, தோற்கடிக்கக் கூடிய இலகுவான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாது என்று அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினால் மிக இலகுவாக தோற்கடிக்கப்படக் கூடிய வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்ஷதான் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்தரப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையால் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வாக்குகளால் தேர்தலில் வெற்றிபெற முடியும்.
எனவே, ஐக்கிய தேசிய கட்சி சவால்கள் இன்றி இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும்.
இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்கக் கூடிய நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட வைப்போம்.
தான் நாடாளுமன்றத்தில் கூறியவாறு, ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்க பிரஜைகள்தான் என்றும், அவர்கள் யாரேனும் சுகவீனம் அடைந்தாலோ, விநோத சுற்றுலா செல்வதாக இருந்தாலோ அமெரிக்காவுக்குத்தான் செல்வார்கள்.
அதேபோன்று உள்நாட்டு யுத்தத்தின் நெருக்கடியான காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுதான் தஞ்சமடைந்தார்” என அவர் சுட்டிக்காட்டினார்.