Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து ஐ.தே.கட்சிக்குள் முரண்பாடு உக்கிரம்

November 22, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கையெழுத்திட்ட கடிதமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு கோரியும், அதே கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திடமிருந்தும் ஒரு கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க் கட்சித் தலைவர் யார் என்ற விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு உக்கிரமடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஐ.தே.க.யின் 40 பேர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சானி அபேசேகர இடமாற்றம்

Next Post

இடைக்கால அரசின் அமைச்சரவை நியமனம்

Next Post

இடைக்கால அரசின் அமைச்சரவை நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures