எக்குவாடோரின் மிகப்பெரிய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ புதன்கிழமை கூறினார்.
சிறைச்சாலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கில்லர்மோ லாசோவின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாஸ் மாகாணத்தின் உவயாகில் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த வன்முறை வெடித்துள்ளது.
வன்முறையினால் மேலும் 80 கைதிகள் காயமடைந்தும் உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த மோதல் எக்குவாடோரின் சிறைச்சாலை அமைப்பில் இதுவரை பதிவாகாத மிகக் கொடூரமான வன்முறையாகும்.
இதேபோன்ற மோதல்கள் இவ்வாண்டு பெப்ரவரி மற்றும் ஜூலை இல் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் நடந்தன.
பெப்ரவரி வன்முறையில் குறைந்தது 79 பேர் இறந்தனர், ஜூலை மாத வன்முறையில் குறைந்தது 22 உயிர்கள் பலியானதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, உவயாகில் செய்தியாளர்களிடம் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]