கிரிக்கெட் தொடர்களில் மிகப் பெரிய தொடராக பார்க்கப்படுவது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கிண்ணத் தொடர் தான்.
உலக அணிகள் எல்லாம் எப்படியாவது அந்த உலகக் கிண்ணத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
அப்படிப்பட்ட உலகக்கிண்ணத் தொடர் தான் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இது தான் சில வீரர்களுக்கு கடைசியான உலகக் கிண்ணத் தொடராக இருக்கலாம். இந்த தொடருக்கு பின் அவர்கள் ஓய்வை அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் இந்த உலகக்கிண்ணத் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கலாம் என்று நம்பப்படும் 7 வீரர்கள் இவர்கள் தான்.
இந்தியா – டோனி
மேற்கிந்திய தீவு – கிறிஸ் கெய்ல்
பாகிஸ்தான் – ஷோயிப் மாலிக்
நியூசிலாந்து – ரோஸ் டெய்லர்
அவுஸ்திரேலியா – கிளான் மெக்ஸ்வேல்
வங்கதேசம் – ஷகிப் அல் ஹசன்
இங்கிலாந்து – இயான் மோர்கன்