Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிலங்குளத்தின் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைக்க நிதி தேவை | ரவிகரன் எம்.பி கோரிக்கை

December 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளத்தினுடைய கட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய  சுமார் 800மீற்றர் வரையிலான குறித்த வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தியதுடன் அவ்வீதியை அமைப்பதற்கான நிதி தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, குறித்த உயிலங்குளம் வீதியை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை அமைச்சர் ஆனந்த விஜயபால வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (22 ) இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

துணுக்காய் உயிலங்குளம் வீதியில், உயிலங்குளம் குளக்கட்டினை பிரதானமான போக்குவரத்துப் பாதையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிலங்குளம், குளக்கட்டின் கீழ்பகுதியினால் போக்குவரத்து வீதியினை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே குளக்கட்டின் கீழ்ப்பகுதியால் சுமார் 800மீற்றர் தூரம்வரையான வீதியை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பில் துணுக்காய் பிரதேசசெயலாளர் இதற்கு பதிலளிக்கையில்,

குளக்கட்டின் கீழ்பகுதியால் வீதி அமைப்பதானால் வயல்காணி மற்றும் தனியார் மேட்டுக்காணி ஒன்றையும் ஊடறுத்தே இந்த வீதியினை அமைக்கமுடியும்.

அண்மையில் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த வீதி அமைப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அக்கலந்துரையாடலில் இவ்வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியினால் அமைப்பதற்கு உரிய தரப்பினரிடமிருந்து காணியினைப் பெற்றுக்கொள்ளுமாறும் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் இவ்வீதியினை அமைப்பதற்குரிய காணியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு எம்மால் பெற்றுக்கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு பிரதேசசெயலகம் காணியினைப் பெற்றுக்கொடுத்த பிற்பாடு உயிலங்குளக் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் பதிலளிக்கையில்,

குளக்கட்டின் பகுதி தாழ் நிலப்பகுதியாகும். எனவே அந்தப்பகுதியில் தரைமுன்னேற்ற ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

மேலும் அவ்வீதி 01km வீதி எனில், அவ்வீதியை அமைப்பதற்கு  ஏறத்தாள 200மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும்.

அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த வீதியை அமைக்கின்ற வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கமுடியுமெனத் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சர் அதற்காகத்தான் வருகைதந்துள்ளார். எனவே அவரிடமிருந்து அவ்வீதியை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால குறித்த வீதியை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவினை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தையிட்டி விவகாரம் : இன்று நாட்டில் சட்டம் சிலருக்குக் கவசம் ; மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதம்!

Next Post

திரையுலக பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் விக்ரம் பிரபுவின் ‘சிறை’

Next Post
விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

திரையுலக பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் விக்ரம் பிரபுவின் 'சிறை'

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures