Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உடைகிறது ஓ.பி.எஸ் அணி: முக்கிய தலைவர் வெளியேறுகிறார்

May 29, 2017
in News
0
உடைகிறது ஓ.பி.எஸ் அணி: முக்கிய தலைவர் வெளியேறுகிறார்

அதிமுக-வின் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அங்கிருந்து வெளியேறும் மன நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த நிலையில், தனது அணியிலேயே நிலவும் கருத்து மோதல்கள், முட்டல்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இதிலிருந்து விடுபட தான் அவர் மூலிகை மருத்துவம் செய்து கொள்ள சென்று விட்டார் என அதிமுகவினர் கூறுகிறார்கள்.

பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து எதிர் அணியிலிருந்து பிரிந்து வந்தனர்.

அதன் பிறகு யாருமே, எடப்பாடி அணியிலிருந்து இங்கு வராததால் பன்னீர் செல்வத்தை அது கவலையடைய செய்துள்ளது.

இதனிடையில், ஓ.பி.எஸ் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்று பயணம், டெல்லி பயணம் போன்ற விடயங்கள் குறித்து அவர் அணியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனிடம் ஏதும் சொல்லவில்லை என்றும் அதனால் அவர் ஓ.பி.எஸ் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நத்தம் விஸ்வநாதனுடன் ஓ.பி.எஸ் கலந்து பேசுவதில்லை.

பல நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதால் நத்தம் விஸ்வநாதன் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.

இதன் காரணமாக விரைவில் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணியில் நத்தம் விஸ்வநாதன் சேருவார் என கூறப்படுகிறது.

அப்படி இல்லையென்றால், அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கலாம் என்ற மன நிலையில் அவர் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

ஜெயலலிதா கூட இதை பண்ணலைங்க! முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகம்

Next Post

பிரித்தானியாவில் எவ்வளவு தீவிரவாதிகள் தற்போது உள்ளனர்? வெளியான தகவல்

Next Post
பிரித்தானியாவில் எவ்வளவு தீவிரவாதிகள் தற்போது உள்ளனர்? வெளியான தகவல்

பிரித்தானியாவில் எவ்வளவு தீவிரவாதிகள் தற்போது உள்ளனர்? வெளியான தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures