இளைஞர்களை இன்று இரவு கைது செய்ய மாஸ்டர் ப்ளானா? நடிகர் பார்த்திபன்
ஜல்லிக்கட்டு உரிமை கேட்டு பல ஆயிரம் இளைஞர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள போராட்ட இளைஞர்களை இன்று இரவு கைது செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகவும், இதற்காக ஏற்பாடுகள் தயராக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனால் இன்னும் இருக்கும் இளைஞர்கள் இப்போதிருக்கும் இளைஞர்களுக்கு கை கொடுங்கள். ஆதரவாய் கடற்கரையில் கூடுங்கள்.
போராடுவோம், இளைஞர்களே, பெண்களே உஷார் என்ற இந்த விஷயம் தீயாய் பரவி வருகிறது. இதை நடிகர் பார்த்திபன் ஷேர் செய்துள்ளார்.

