இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்பு உரையாற்றிய போதே இந்த கண்டனத்தை வெளியிட்டார்.
மேலும் மனிதாபிமானமற்ற தீவிரவாத செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று இதன்போது குறிப்பிட்டார்.
அத்தோடு எவ்வித தயக்கமுமின்றி, இலங்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.