Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

October 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இனி எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது.

இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வடையக் கூடும்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிலை காரணமாக எரிபொருளின் விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் இது பொருளாதார மந்த நிலையில் நாடுகளை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படடுள்ளது.

இந்த போரில் மத்திய கிழக்கு நாடுகள் இரண்டு பக்கங்களாக பிரிந்து நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் சில நாடுகளும் ஆதரிக்கும் சில நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளாக உள்ளன.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை | Israel Palestine War Fuel Price

இந்தநிலையில், போரின் எதிரொலியால் விரைவாக எரிபொருள் விலைகள் உயர்வடையும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், நீண்ட நாள் போருக்குத் தாம் தயார் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அவ்வாறு, போர் தொடருமானால் கச்சா எண்ணெய்யின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும், அப்படி மாற்றங்கள் ஏற்படுமிடத்து இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் அது தாக்கம் செலுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்புச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு அதிகரிப்பு ஏற்படுமானால் இது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Post

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு சந்தேகநபரை விடுதலை செய்த நீதிபதி இளஞ்செழியன்

Next Post

சீனா இலங்கை இணக்கப்பாடு குறித்து எங்களிற்கு எதுவும் தெரியாது – சர்வதேச நாணயநிதியம்

Next Post
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

சீனா இலங்கை இணக்கப்பாடு குறித்து எங்களிற்கு எதுவும் தெரியாது - சர்வதேச நாணயநிதியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures