Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

February 20, 2017
in News
0
இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலி..

 

 

களுத்துறை கடலில் மூழ்கிய படகு – 10 சடலங்கள் மீட்பு – பலர் பலியாகி இருக்கலாம் என அச்சம்

படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

களுத்துறை கட்டுகுருந்த கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் சுமார் 16 ற்கும் அதிகமானவர்கள் பயணித்திற்குக்க கூடும் எனவும், இதுவரையில் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த படகில் சென்றவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், மற்றவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகுருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தவர்கள் எனவும், அவர்களின் படகு கட்டுகுருந்த பகுதியிலேயே கவிழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படையின் 3 டோரா படகுகளும், 3 டிங்கி படகுகளும் வான்படையினரின் பெல் 212 ஹெலிகொப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை – நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர்: அச்சத்தில் தென்னிலங்கை

Next Post

விரைவில் சட்டமாகிறது பலவந்தமாக காணாமல் ஆக்கப்படடவர்கள் தொடர்பான சட்டமூலம்

Next Post
விரைவில் சட்டமாகிறது பலவந்தமாக காணாமல் ஆக்கப்படடவர்கள் தொடர்பான சட்டமூலம்

விரைவில் சட்டமாகிறது பலவந்தமாக காணாமல் ஆக்கப்படடவர்கள் தொடர்பான சட்டமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures