Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஒபாமா!

December 17, 2016
in News
0
இலங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஒபாமா!

இலங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஒபாமா!

 இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை, அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக் கூடியதாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்தில் இணைந்துள்ள மங்கள சமரவீர, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைக்கு மற்ற நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பிலும் மங்கள கருத்து வெளியிட்டார்.

மக்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றமே அவசியமாக உள்ளதெனவும், அந்த பொருளாதாரத்தை வழங்குவதற்கு ஹம்பாந்தோட்டைக்கு சீனாவா? இந்தியாவா என்பது முக்கியமல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வெகு விரைவில் கிடைக்கவுள்ள இன்னுமொரு அமெரிக்க நிதி தொடர்பில் மங்கள சமரவீர இதன் போது கருத்து வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் இந்த நிதியை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளார். Millennium challenge compactயை இலங்கைக்கு, அமெரிக்காவினால் வழங்கப்படவுள்ளது.

அதில் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் உள்ளது. இது கடன் அல்ல. இது உதவி. ராஜபக்ச ஆட்சியில் அமெரிக்காவினால் அது முழுமையாக இரத்து செய்யப்பட்டிருந்ததென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! – அச்சத்தின் மத்தியில் பெண்கள்

Next Post

முப்படைகளின் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியிடம் இருந்து மாற்றம்..!! – இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி முழு நாடும் அழிந்து போவது நிச்சயம்..!!!

Next Post
முப்படைகளின் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியிடம் இருந்து மாற்றம்..!! – இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி முழு நாடும் அழிந்து போவது நிச்சயம்..!!!

முப்படைகளின் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியிடம் இருந்து மாற்றம்..!! - இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி முழு நாடும் அழிந்து போவது நிச்சயம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures