Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவத்தினர் வடக்கை விட்டு வெளியேறும் போது விகாரைகளையும் கொண்டு செல்வார்களா?

July 12, 2016
in News
0
இராணுவத்தினர் வடக்கை விட்டு வெளியேறும் போது விகாரைகளையும் கொண்டு செல்வார்களா?

இராணுவத்தினர் வடக்கை விட்டு வெளியேறும் போது விகாரைகளையும் கொண்டு செல்வார்களா?

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் என்று சத்தமாக கூவிக் கொண்டு மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது.

நாயாறு நீராவி ஏற்றத்தில் பிள்ளையாரை தூக்கி விட்டு விகாரையுடன் புத்தரைஅமர்த்தியுள்ளனர். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை, ஏன்? தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத்திணைக்களக் காணியில் விகாரை இதனால் நீர்ப்பாசனத்திணைக்களமும் அகதியாகி இருக்கின்றது.

இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாத்தான முறையில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018 இல் வடபகுதியில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார்.

இன நல்லிணக்கத்திற்கு அல்லது ஐ.நாவுக்கு பயந்து இது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Featured
Previous Post

நாமல் ராஜபக்க்ஷ கைது!

Next Post

சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

Next Post
சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures