Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தினரை அரசாங்கம் கொச்சைப்படுத்துகின்றது : இந்திக்க அனுருத்த சாடல்!

February 5, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

சுதந்திர தின நிகழ்வின் போது, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதை விடுத்து, அவர்களை ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியின் போது உணவுப் பொட்டலங்களை வழங்கியவர்களாக மட்டும் மட்டுப்படுத்தி ஜனாதிபதி உரையாற்றியமை கவலையளிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய சபாநாயகர் பாரிய நிதி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிகாரபூர்வ இல்லங்கள் தேவையில்லை எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை அனுபவித்து வருவதாகவும், இந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை ஒரு மோசமான முன்மாதிரி என்றும் அவர் சாடினார். 

அத்துடன், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க ‘ராஜபக்ச வேட்டையை’ மீண்டும் கையில் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே நேரத்தில் சிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை விசாரணை பிரிவுகளுக்கு அழைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறினார்.

 நிலக்கரி ஊழல் மற்றும் சபாநாயகர் மீதான புகார்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம், ராஜபக்சவினரை வேட்டையாடுவதன் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் வெறும் நிவாரணப் பணியாளர்களாகச் சித்திரிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்த அவர், முப்படையினர் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றியவர்கள் அல்ல எனவும், அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஒன்றிணைக்க உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி தனது உரையில் இனவாதத்திற்கு இடமில்லை எனக் கூறியதை வரவேற்ற அவர், அதனைச் சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். 

சுதந்திர தினத்தன்று வடக்கில் கறுப்புக்கொடி ஏற்றி துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டது, இன்னும் அங்கு இனவாதத் தூண்டல்கள் இருப்பதையே காட்டுவதாகவும், அதனைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறுதியாக, சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், விசாரணை நிறுவனங்கள் எவருக்கும் அஞ்சாமல் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Previous Post

அனுர அரசுக்கு மனோ கணேசன் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் – கல்வி அமைச்சர்

Next Post
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026

Recent News

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures