இந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி விருதினை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெற்று கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தியின் மறைவிற்கு பின்னர், அமைதி, நாட்டின் வளர்ச்சி உட்பட ஆயுதப்பரவல் தடை, ஆகியவற்றில் சிறந்து விளங்கியோருக்கு வழங்கப்படும் இந்திராகாந்தி விருது, இவ் வருடம் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ் விருதினை, கடந்த ஆண்டு விண்வெளி ஆராட்சி நிலையமான இஸ்ரோ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.