Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய நாடாளுமன்றத்தின் மாடியில் இருந்தவாறு எதிர்க்கட்சிகள் போராட்டம் | இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைப்பு

March 21, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இந்திய நாடாளுமன்றத்தின் மாடியில் இருந்தவாறு எதிர்க்கட்சிகள் போராட்டம் | இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைப்பு

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி இந்திய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. எனினும் இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோல் ஆளும்கட்சியான பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அதுவரை நாடாளுமன்றம் நடைபெற விடமாட்டோம் என்றும் கூறி அவர்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியதும் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல்மாடிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் அங்கு இருந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும் அதே கோரிக்கையை வலியுறுத்தும் மிகப் பெரிய பதாகையைகீழே தொங்கவிட்டபடியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Previous Post

நீர்வீழ்ச்சியில் நீராடியபோது காணாமல் போனவர்கள் கல்முனையைச் சேர்ந்தவர்களே !

Next Post

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

Next Post
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures