டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசின் நிதி அறிக்கையில் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆனால், கிரிப்டோகரன்சியை எப்படி அனுமதிக்கும், அதற்கான நெறிமுறைகளை இன்றும் மத்திய அரசு வெளியிடவில்லை.
இந்த நிலையில் கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமலில் இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரியில் உச்சப்பட்சமே 28 சதவீதம்தான். அதையும் தாண்டி 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், ‘‘டிஜிட்டல் சொத்து டிரான்ஸ்பர் மூலம் கிடைக்கும் எந்தெவொரு வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர்த்து வேறேதுனும் செலவு மற்றும் அலவன்ஸ் போன்றவற்றிற்கு வரி குறைக்கப்படாது’’ என தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]