Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’

March 27, 2022
in News, World
0
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிய நாடொன்றின் தூதரகம்?

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல்கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 150 அகதிகள் என 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.

முன்னதாக, கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் உள்ள அகதிகளில் 150 பேரை ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நியூசிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிடப்பிலேயே வைத்திருந்த நிலையில் இப்பொழுது அது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு மையங்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் அல்லது படகு வழியாக வந்து தற்காலிக விசாவில் காத்திருக்கும் அகதிகளும் நியூசிலாந்தில் மீள்குடியமருவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

முதன் முதலில், கடந்த 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லர்ட் ஆட்சியின் போது ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே இப்படியான அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த தாராளவாத- தேசிய கூட்டணி ஆட்சி இந்த ஒப்பந்தத்தை பின்பற்ற தயக்கம் காட்டி அதை கிடப்பில் போட்டது. படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை அவ்வாறு நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தினால் அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தரமாக குடியமருவார்கள் என்ற கருத்தை அக்கூட்டணி முன்வைத்தது. இந்த சூழலில், அதே கூட்டணி ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையில் அகதிகள் மீள்குடியமர்த்தல் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

கடந்த 2001 முதல் 2007 வரை நடத்தப்பட்ட ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கான அகதிகளை நியூசிலாந்து ஏற்கனவே மீள்குடியேற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும் | எச்சரிக்கிறார் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Next Post

யாழ் – இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?

Next Post
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

யாழ் - இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures