அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், எந்த இடத்தில் இடம்பெறும் என்பதை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்கச் செய்யும் விதத்தில் மக்கள் போராட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவித்தால், அரசாங்கம் அதனைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் எனவும், இதனாலேயே தாமதித்து எந்த இடத்தில் நடாத்துவது என்பதை அறிவிக்க தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.