ஆர்ஜென்டீனாவில் விஷம் கலந்த கொக்கெய்னை பயன்படுத்தியதனால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 56 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆர்ஜென்டீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இறந்தவர்கள் Hurlingham, San Martin மற்றும் Tres De Febrero ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]