Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆபரேஷன் தலாஷ்: அந்தமானில் மாயமான விமானத்தை தேடும் பணி 300 கடல் மைல் தொலைவுக்கு விரிவாக்கம்

July 25, 2016
in News
0
ஆபரேஷன் தலாஷ்: அந்தமானில் மாயமான விமானத்தை தேடும் பணி 300 கடல் மைல் தொலைவுக்கு விரிவாக்கம்

ஆபரேஷன் தலாஷ்: அந்தமானில் மாயமான விமானத்தை தேடும் பணி 300 கடல் மைல் தொலைவுக்கு விரிவாக்கம்

தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்றபோது மாயமான இந்திய விமானப்படையின் ஏ.என்.32 வகை விமானத்தை தேடும் பணிக்கு ஆபரேசன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ளதாக சென்னையில் கடலோர காவல் படை ஐ.ஜி ராஜன் பர்கோத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 22ம் திகதி தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்று மாயமான விமானத்தை தேடும் பணி நான்காவது நாளாக நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

வங்கக்கடல் வழியாகச் செல்லும் அனைத்து வர்த்தக கப்பல்களுக்கும் விமானம் மாயமானது பற்றிய தகவல் தரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து 150 கடல் மைல் தொலைவில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தேடுதல் பணியை 300 கடல் மைல் தொலைவிற்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் விமானம் மாயமாகி 4 நாட்கள் ஆகியும் அது குறித்த துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்றார். 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

13 கடற்படை கப்பல்கள், 4 கடலோர காவல்படை கப்பல்கள், 12 விமானங்கள் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட மர்மபொருளானது மீன்பிடி படகில் இருந்த உதிரிப்பாகம் என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேடுதல் பணிக்கு வானிலை நிலவரம் பாதகமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஐஐி ராஜன், சென்னைக்கு கிழக்கே நடைபெற்று வரும் சோதனை தென்கிழக்கு கடலுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் தேடும் பணி நாளை முதல் துவங்கும் என்றும் கூறினார். இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார். விமானத்தை தேடும் பணிக்கு ஆப்ரேஷன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

சுவாதியை கொன்றது இரண்டு பேரா?

Next Post

2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார்!

Next Post
2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார்!

2வயது குழந்தையுடன் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்த பொலிஸார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures