Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆபரணத் தொழிற்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

July 13, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அந்நிய செலாவணியினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தங்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 15% வீத இறக்குமதி வரியை தளர்த்துதல், இரத்தினக்கல், ஆபரண தொழிற்துறையானது புதிய வருமான வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதன் காரணமாக எழுந்துள்ள அசௌகரியங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் காணிகளுக்கு சுரங்கம் அகழ்வதற்கு அனுமதி பத்திரங்கள் வழங்கும் கட்டணத்தை குறைத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள வயல் காணிகளை சுரங்கம் அகழ்வதற்காக பயன்படுத்துதல், சுரங்க அகழ்வின் பின்னர் அவற்றை மூடி விடுவதற்கு அத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுரங்கங்களை அகழ்தல் மற்றும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் சுரங்க அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவற்றை மூடாது விட்டு விடுவோரின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சட்ட விரோத அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான சுற்றி வளைப்புகளின்போது எழும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது நிறுவனமயப்பட்ட ஒழுங்கில் செயற்பட்டு வரும் போலி இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முறையான பொறிமுறை ஒன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, கயந்த கருணாதிலக்க, தயா கமகே, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, நிதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட இரத்தினக்கல், ஆபரணங்கள் துறை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Previous Post

யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

Next Post

இரண்டு நாள்கள் இருளில் மூழ்கப்போகும் வடக்கு

Next Post

இரண்டு நாள்கள் இருளில் மூழ்கப்போகும் வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures