Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆபத்தில் பிரித்தானியா: பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

May 7, 2017
in News
0
ஆபத்தில் பிரித்தானியா: பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

பிரித்தானியா பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரியாவை தளமாக கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது.

Takfiri என்ற குழுவுடன் இணைந்து போராட பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பயங்கரவாதிகள், மீண்டும் பயங்கரவாத குழுவாக நாட்டுக்குள் புகுந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகளை முழுமையாக காண்காணிப்பது, பாதுகாப்பு படைகளுக்கு முடியாத காரணமாகும்.

அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு வெளியே காரை ஒன்றை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் பின்னர் பிரித்தானியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறைந்தது 800 பிரித்தானியர்கள் பல்வேறு Takfiri குழுக்களுடன் இணைந்து போராடுவதற்காக சிரியா மற்றும் ஈரானுக்கு சென்றுள்ளனர். அவர் மீளவும் நாட்டிற்குத் திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த குழுக்களினால் பயிற்றுவிக்கப்பட்ட 5000 பயங்கரவாதிகள் ஐரோப்பாவில் உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 100 நாடுகளை சேர்ந்த 30000 பேர் Takfiri தீவிரவாத குழுவில் இணைவதற்காக சிரியா மற்றும் ஈராக்கிற்கு பயணித்துள்ளனர். இந்த தகவலை கடந்த பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றவியல் புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Daesh பயங்கரவாதிகள் முக்கியமாக சிரியா மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான ஈராக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

கெடு முடிந்தது! வெள்ளை மாளிகை வெடித்து சாம்பலாகும்: வட கொரியா அறிவிப்பு

Next Post

நேர் எதிர் வாகன மோதலில் வயோதிபர் கொல்லப்பட்டார்!

Next Post
நேர் எதிர் வாகன மோதலில் வயோதிபர் கொல்லப்பட்டார்!

நேர் எதிர் வாகன மோதலில் வயோதிபர் கொல்லப்பட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures