Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் | செல்வம் எம்.பி. பரிகாசம்

November 20, 2021
in News, Sri Lanka News
0
புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செல்வம் எம்.பி.

அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமானது  ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது.

எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், அவர் மேலும் கூறுகையில்,

கஜானாவில் பணம் இல்லை என்று சொல்கின்ற அரசாங்கம், அபிவிருத்தி திட்டங்களையெல்லாம் நிறுத்தியுள்ள அரசாங்கம்  சமர்ப்பித்துள்ள இந்த வரவு செலவுத்திட்டம் வேடிக்கையானது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை.

அதேவேளை அரசு ஊழியர்களை சுமை எனக்கூறும் நிதி அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் வாழ முடியாத நிலையை தீர்க்கும் எந்த திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இந்த வரவு செலவுத்திட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகவே உள்ளது.

அரசாங்கம் நிர்ணய விலையை தளர்த்தியுள்ளதால் எந்தப்பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற  நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் இராணுவத்துக்கு பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சி வருமா?யாருடன் போரிடப்போகின்றீர்கள்? இந்தியாவுடனா , பாகிஸ்தானுடனான அல்லது தமிழர்களுடன் போரிடப்போகின்றீர்களா?

பௌத்த விகாரைகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பூர்விக இடங்களில் தொல்லியல் திணைக்களம் விகாரைகளைக்கட்டப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஏனைய  மதங்களுக்கு ஏன் சம அந்தஸ்து வழங்கப்படவில்லை? நிதிகள் ஒதுக்கப்படவில்லை? ஏன் இந்த விடயத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் அமுல்படுத்தப்படவில்லை ? இந்த நாடு பௌத்த சிங்கள நாடு என்ற சிந்தனையிலேயே நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றீர்கள்.

முறையான திட்டமிடல் இல்லாத இயற்கை உர அறிவிப்பினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தக்காளி இன்று 600 ரூபாவை தாண்டியுள்ளது. தேங்காய் 100 ரூபாவை எட்டியுள்ளது. அனைத்து பொருட்களும் பலமடங்கு விலை அதிகரித்து விட்டன. இந்நிலையில் சாதாரண மக்களின் கூலி கூட்டப்படவில்லை. அவர்களினால் எப்படி வாழ முடியும்?

இன ,மத வெறியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று பொருளாதார நெருக்கடியால் திண்டாடுகின்றது. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் அரச  ஊழியரின் ஓய்வு பெரும் வயதையும் அரசாங்கம்  65 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரு பட்டதாரி எப்படி அரச வேளையில் இணைய முடியும்? எமது மீனவர்கள் அரசாங்கத்தின்  நடவடிக்கைகளினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம்  மட்டுமல்ல நல்லாட்சி அர்சங்கமும் எமது மீனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மீண்டும் மகிந்த சகோதரர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை வரும் | குமார வெல்கம

Next Post

விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா?

Next Post
விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா?

விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures