‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்

‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்

 

மணிகண்டன் இயக்கத்தில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று இருக்கிறது. இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.

மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘ஆண்டவன் கட்டளை’. கே இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘ரெளத்திரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்துக்காக பிரம்மாண்டமான தூதரகம் அரங்கு அமைத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இயக்குநர் மணிகண்டனின் முந்தைய படங்களான ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போல் அல்லாமல் இப்படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘காக்கா முட்டை’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பின்பே திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அதே போல ‘குற்றமே தண்டனை’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்துக் கொண்டே, ‘குற்றமே தண்டனை’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் கவனிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News