Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்.. ஸ்கூலை கட் அடித்தால் பெற்றோருக்குத் தகவல்’

July 15, 2017
in News
0
ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்.. ஸ்கூலை கட் அடித்தால் பெற்றோருக்குத் தகவல்’

மாணவர்களின் ஒத்துழைப்பால் நெல்லையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி, முன்மாதிரியானப் பள்ளியாக மாறியுள்ளது. மாணவர்களைப் போல ஆசிரியர், ஆசிரியைகளும் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.

நெல்லை சந்திப்பில் மதுரை திரவியம் தாயுமானவர் (ம.தி.தா) இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளியில்தான் பாரதியார், வ.உ.சி உள்ளிட்டோர் பயின்றதாகத் தகவல் உள்ளது. மேலும், மனோன்மணியம் சுந்தரனாரும் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தப்பள்ளியின் வரலாறே ஒரு வரலாறு.

இதுகுறித்து பள்ளியின் மத்தியஸ்தர் வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், “கடந்த 1859-ம் ஆண்டு நெல்லை டவுனில் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுகொடுக்கும் பள்ளியை நெல்லை சைவ பெருமக்கள் தொடங்கினர். இதன்பிறகு நெல்லை சந்திப்பில் 1861ல் இந்து கலாசாலை என்ற பெயரில் பள்ளி செயல்படத் தொடங்கியது. 1878ல் இரண்டாம் நிலைக் கல்லூரியும், பள்ளியும் செயல்பட்டது. கடந்த 1935ல் தமிழகத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்தச்சமயத்தில் மதுரையைச் சேர்ந்த திரவியம் பிள்ளை என்பவர் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையாக கொடுத்தார். இதன்பிறகு பள்ளியும் கல்லூரியும் புத்துயிர் பெற்றது.

அப்போது, நன்கொடை கொடுத்த திரவியம் பிள்ளைக்கு நன்றிக் கடனாக அவரது பெயரும், அவரது சகோதரர் தாயுமானவர் என்பவரின் பெயரையும் சேர்த்து பள்ளியின் பெயரை 1936ல் மாற்றினர். 1961ல் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1958ல் நெல்லை சந்திப்பில் செயல்பட்ட ம.தி.தா இந்துக்கல்லூரி நெல்லை அருகே உள்ள பேட்டைக்கு இடமாற்றப்பட்டது. 1978ல் உயர்நிலைப்பள்ளியாக இருந்தது, மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளி, திருநெல்வேலி கல்விச் சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மூன்று ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தனியார் பள்ளிகளின் வருகையால் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்ற இந்தப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், பள்ளியில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், சிறப்பாக பள்ளியை செயல்படுத்தவும் இந்த கல்வியாண்டில் என்னை மத்தியஸ்தராக திருநெல்வேலி கல்வி சங்கத்தினர் நியமித்தனர்.

இதன்பிறகு பள்ளி நிர்வாகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டேன். இதற்கு கல்வி சங்கத்தினரும், ஆசிரியர், ஆசிரியைகளும், பள்ளி ஊழியர்களும், மாணவ, மாணவிகளும் உறுதுணையாக இருந்தனர். இதனால், தனியார் பள்ளிகளைப் போல ம.தி.தா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கையேடு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கறுப்பு நிற பெல்ட், ஷு அணிந்து வர வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த கல்வியாண்டில் 20 சதவிகித மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அடுத்து, மாணவர்களைப் போல ஆசிரியர், ஆசிரியைகளும் யூனிபார்மில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இதையடுத்து காமராஜர் பிறந்த தினமான இன்று முதல் ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளை நிற ஒவர் கோர்ட் அணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளி ஊழியர்களும் வெள்ளைச் சட்டையும், கறுப்பு நிற பேண்ட்டும் யூனிபார்மாக அணிந்துவந்தனர்.
பள்ளி நேரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பைவிட்டு வெளியே வரத் தடை, பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் காலை பத்து மணிக்குள் அவர்களது பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பள்ளிக்கு வராமல் மாணவர்கள் ஊர் சுற்றுவது (கட் அடிப்பது) தடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியைகள், கண்டிப்பாக தலைமுடியை கொண்டைப் போட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதுபோன்ற புதிய நடைமுறை மாற்றங்களால் ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி மேலும் சிறப்பாக விளங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாற்றங்களுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்” என்றார் பெருமையுடன்

Previous Post

உள்ளாட்சித் தேர்தல் வரட்டும், என்ன பயமா?

Next Post

அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யப் போகும் 1581 எம்.பிக்கள்!!

Next Post
அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யப் போகும் 1581 எம்.பிக்கள்!!

அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யப் போகும் 1581 எம்.பிக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!

July 29, 2026
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

July 29, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!

July 29, 2026
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

July 29, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures