Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

March 26, 2017
in News
0
அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவரது நிர்வாகம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் இப்போது உலகமெங்கும் உள்ள தனது தூதரக, துணைத்தூதரக அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

அமெரிக்க பயணத்துக்காக எந்தநாட்டவர்களும் விசா கேட்டு விண்ணப்பித்தாலும், அது சுற்றுலா விசாவாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியிலான விசாவாக இருந்தாலும் சரி, விசா வழங்குவதில் தீவிர கெடுபிடிகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர் தனது 15 ஆண்டு சரித்திரத்தை சொல்ல வேண்டும். அதாவது, 15 ஆண்டுகளாக அவர் எங்கே குடியிருந்தார், என்ன வேலை பார்த்தார், இறுதி 5 ஆண்டுகளில் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண்கள் என்ன, இமெயில் முகவரி என்ன, சமூக வலைத்தள கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூதரக அதிகாரிகள் மூலம் பெறப்பட்டு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த விதத்திலும் வன்முறைகள், குற்றச்செயல்கள், பயங்கரவாத செயல்கள் செய்கிறவர்கள், அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அமெரிக்காவினுள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கெடுபிடிகளை பின்பற்றுமாறு தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு கூறி உள்ளது.

விண்ணப்பதாரர்களிடம் இன்னும் கூடுதல் கேள்விகள் எழுப்புமாறும் தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா அதிகாரிகள் தினந்தோறும் விசா வழங்குவதற்கு நேர்முகத்தேர்வு நடத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கெடுபிடிகள் காரணமாக இனிமேல் அமெரிக்க விசா பெறுவது எளிதான ஒன்றாக இருக்காது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

Next Post

ஒரு மணி நேரம் இருளில் மூழ்கவுள்ள கனடியர்கள்!

Next Post
ஒரு மணி நேரம் இருளில் மூழ்கவுள்ள கனடியர்கள்!

ஒரு மணி நேரம் இருளில் மூழ்கவுள்ள கனடியர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures