அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஓட்டோ வாம்பியர் 2015ல் வடகொரியாவுக்கு கல்வி சுற் றுலா சென்றார். வடகொரியா குறித்த ரகசிய தகவல்களை திருடியதாக 2016 ஜனவரியில் பியாங்யாங் பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஓட்டோ வாம்பியர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் அழுத்தத்தால் ஓட்டோ வாம் பியர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டு 2017-ஜூன் 13ல் அமெரிக்கா அனுப்பிவைக்கப்பட்டார்.ஆனால் அமெரிக்கா வந்து சேர்ந்த சில நாட்களில் ஓட்டோ வாம்பியர் இறந்தார். வடகொரியாவில் அவர் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதனை மறுத்தது.
இந்நிலையில் ஓட்டோ வாம்பியரின் மருத்துவ சிகிச்சைக்காக தாங்கள் செலவு செய்த ரூ.14 கோடியே லட்சத்து 23 ஆயிரத்தை தரும்படி அமெரிக்காவை வடகொரியா வலியுறுத்தி உள்ளது. இதற்கான பில் கொடுக்கப்பட்டுள்ளது.