Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

February 24, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓட்டு கேட்டு ஓடி வருவான்..’

எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இதனை நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் இயக்குநரும், நடிகருமான அமீர் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

அரசியலை நையாண்டித்தனத்துடன் விவரித்திருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார்.

இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ‘ஓட்டு கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க.. காச நீட்டி ஆச காட்டுவான் வாங்கிடாதீங்க…’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியரும், கவிஞரும், அரசியல்வாதியுமான சிநேகன் எழுத, பின்னணி பாடகர் குரு பாடியிருக்கிறார். இந்த பாடலில் ‘சாயம் போகுதே சனநாயகம்.. அடிச்சு கிழிக்குதே பண நாயகம். ..’ என்ற பாடல் வரி இன்றைய அரசியல் யதார்த்தத்தை பட்டவர்த்தனமாக உணர்த்துவதை இசை ஆர்வலர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.

Previous Post

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் ‘வடக்கன்’

Next Post

முட்டாள் போல் பேசாமல் படித்தவரை போல் கருத்துரையுங்கள் | நீதியமைச்சரை நோக்கி ஸ்ரீதரன் எம்.பி கடும் ஆவேசம்

Next Post
பிரபாகரனின் தீர்க்கதரிசனம் இன்று இலங்கையில் இடம்பெறுகின்றது | சிறீதரன்

முட்டாள் போல் பேசாமல் படித்தவரை போல் கருத்துரையுங்கள் | நீதியமைச்சரை நோக்கி ஸ்ரீதரன் எம்.பி கடும் ஆவேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures