ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலையில், ஈரானுடன் இணைந்த ஹவுதி குழுவிற்கு சொந்தமான சனாவில் உள்ள கோட்டைகள் மற்றும் முகாம்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதாக கூட்டணி கூறியதாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சுமார் 14 பேரைக் கொன்ற தாக்குதல், முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டைத் தாக்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் இராணுவ அதிகாரி, அவரது மனைவி, அவரது 25 வயது மகன், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்களும் பலியானார்கள் என்று மருத்துவ ஆதாரம் மற்றும் குடியிருப்பாளர்கள் ரொய்ட்டர்ஸிடம் கூறியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகரையும் வடக்கு யேமனின் சில பகுதிகளையும் கைப்பற்றினர்.
இதனால் தப்பி ஓடிய ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹாடியின் அரசாங்கத்தை மீட்டெடுக்க 2015 இல் யேமனின் போரில் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தலையிட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2019 இல் யேமனில் தனது இராணுவ இருப்பினை பெருமளவில் குறைத்துள்ளது, ஆனால் யேமன் படைகள் ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]