Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அக்டோபரில் உலகம் அழியும்! இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்

January 4, 2017
in News, Tech
0
அக்டோபரில் உலகம் அழியும்! இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்

அக்டோபரில் உலகம் அழியும்! இரகசிய அறைகளை கட்டத்துவங்கும் பெரும் பணக்காரர்கள்

இந்த ஆண்டு அக்டோபரில் பூமியை சிதைக்கும் அளவில் ஒரு கிரகம் வந்து தாக்கும் எனவும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் இரகசிய அறைகளை கட்டத்துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வு புத்தகத்தை வெளியிட்ட David Meade என்பவர் குறித்த தகவலை உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த பேரழிவு நிகழப்போவதகவும், பூமி சின்னா பின்னமாக உடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த தகவலை அறிந்த உலக பெரும் பணக்காரர்கள் அனைவரும் குறித்த பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள இரகசிய அறைகளை இப்போதே அமைக்க துவங்கியுள்ளதாக David Meade ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறார்.

குறித்த நிகழ்விற்கு அவர் கூறும் முதல் காரணம், வழக்கத்திற்கு மாறாக உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எழும் நிலநடுக்கங்கள். பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எழுவதற்கு முக்கிய காரணம், இயற்கை மக்களை எச்சரிக்கை விடுக்கிறது என்கிறார் David Meade.

அடுத்ததாக அவர் முன் வைக்கும் காரணம் புயல்கள். கடந்த சில ஆண்டுகளாக உக்கிர புயல்கள் தொடர்ந்து மனித இனத்தை வேட்டையாடி வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த உக்கிர புயல்கள் தாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் பூமியில் உள்ள ஆழ்துளைகள் அனைத்தும் மிக வேகமாக பெரிதாகி வருவதாகவும், உஷ்ணக்காற்று மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறி வருவதாகவும், பருவ நிலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மட்டுமின்றி பாலைவனம் சார்ந்த சில நாடுகளில் திடீரென்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையும் மழையின் அளவு குறைந்து குளிரின் அளவு அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இப்படியிருக்க, ஆண்டு தோறும் இதுபோன்று புதிதாய் கிளம்பும் சில ஆய்வாளர்கள் பூமி இந்த ஆண்டு சிதையும், உலகம் சில நாட்கள் இருளில் மூழ்கும் என புது புது கருத்துகளை வெளியிட்டும், அந்த குறித்த காலத்தில் நிகழாமல் போவதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தங்கமும் வெள்ளியும்..! ஒய்யார நடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஒலிம்பிக் நாயகிகள்

Next Post

ஏமாற்றப்படும் தமிழர்கள்..! காக்கப்படும் இராணுவம் அடிமைப்படும் தமிழினம்..!

Next Post
ஏமாற்றப்படும் தமிழர்கள்..! காக்கப்படும் இராணுவம் அடிமைப்படும் தமிழினம்..!

ஏமாற்றப்படும் தமிழர்கள்..! காக்கப்படும் இராணுவம் அடிமைப்படும் தமிழினம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures