ரொறொன்ரோவில் ஒரே இரவில் ஏற்பட்ட புயல் மழையின் அனர்த்தம்.

ரொறொன்ரோவில் ஒரே இரவில் ஏற்பட்ட புயல் மழையின் அனர்த்தம்.

கனடா- ரொறொன்ரோ பூராகவும் இரவு ஏற்பட்ட பலத்த காற்று கன மழை ஆகியனவற்றால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சார லைன்கள் செயலிழந்ததால் இரவு பூராகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி அல்லற்பட்டனர்.யேன் மற்றும் செப்பேர்ட் பகுதியில் மக்கள் ஏற்றிகளிற்குள் சிக்குண்டனர்.
இக் கோடை புயலினால் வாகனங்கள், பல வீடுகள் போன்றன நகரம் முழுவதிலும் சேதமடைந்துள்ளன.
வேலிகள், கட்டுமான பணி பொருட்கள் காற்றினால் வீதிகளில் வீசி எறியப்பட்டன.
எற்றோபிக்கோவில் மாட்டின் குறூவ், இஸ்லிங்ரன் அவெனியு ,எக்லிங்ரன அவெனியு மற்றும் டிக்சன் வீதி பகுதிகளில் பாரிய மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர ஸ்காபரோ பகுதியில் சிறிய அளவில் வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.
மேலதிகமான மழை, இடிமுழக்கம் வியாழக்கிழமையும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் சூடான மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதி உயர் வெப்பநிலை 30 C ஆக இருக்கும் ஆனால் ஈரப்பதனுடன் கூடி 38ஆக உணரப்படும்.

storm6storm1storm1ostorm4storm3storm5storm9

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News