பூனையின் தலையில் கடித்த இளைஞர்; சில தினங்களில் பூனை இறந்தது

பூனையின் தலையில் கடித்த இளைஞர்; சில தினங்களில் பூனை இறந்தது

இவர் பூனையின் தலையை கடித்தும் துன்­பு­றுத்­தி­னாராம். அதன்பின் சில தினங்­களில் அப் ­பூனை இறந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 22 வய­தான கிறேக் மில்ஸ் எனும் இளை­ஞரே 2 வய­தான பூனையின் தலையில் கடித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

இவரும் மற்­றொரு இளை­ஞ­ரான டேவிட் வோல்கர் என்­ப­வரும் ஒரு பாலின ஜோடி­யாக ஒரே வீட்டில் வசித்து வந்­தனர். மேற்­படி பூனை இறந்­த­தை­ய­டுத்து, டேவிட் வோல்­கரும் இதற்குக் கார­ண­மாக இருக்­கலாம் என அய­ல­வர்கள் சந்­தே­கப்­பட்­ட­னராம்.

டேவிட் வோல்கர்

இதனால் தான் இதில் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என நிரூ­பிப்­ப­தற்­காக இர­க­சி­ய­மாக தான் பதிவு செய்த வீடி­யோவை டேவிட் வோல்கர் (20) வெளி­யிட்­டுள்ளார்.

கிறேக் மில்ஸ் பூனையை கடிக்கும் குரூரக் காட்சி இவ் ­வீ­டி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது. தான் மேற்­படி பூனையை கொன்­ற­தாக கிறேக் மில்ஸ் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இதே­வேளை, தற்­போது கிறேக் மில்­ஸி­ட­மி­ருந்து பிரிந்து வாழும் டேவிட் வோல்கர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு ள்ளதாக தெரிவித்துள்ளார்

.cat-1

cat-2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News