பாதுகாப்பு எச்சரிக்கையால் பிரசல்ஸில் முக்கிய வணிக வளாகம் மூடல்
-
பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை தொடர்ந்து தலைநகர் பிரஸ்ஸால்ஸிலுள்ள ஒரு முக்கிய வணிக வளாகத்தை பெல்ஜியத்தின் ஆட்சியாளர்கள் மூடி இருக்கின்றனர்.
![](http://ichef.bbci.co.uk/news/ws/624/amz/worldservice/live/assets/images/2016/06/18/160618082040_belgium_police_640x360_reuters_nocredit.jpg)
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், போலியான தற்கொலை ஆடையை அணிந்திருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வெடி பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிஷேல் பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர்களுடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
![](http://ichef-1.bbci.co.uk/news/ws/624/amz/worldservice/live/assets/images/2016/06/19/160619032948_belgium_search_operation_terror_640x360_ap_nocredit.jpg)
கடந்த நம்பர் மாதம் பாரிஸிலும், மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸிலும் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் பெல்ஜியம் அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் இருந்து வருகிறது.
பெல்ஜியத்தின் நகர ரெயில் நிலையத்திலும், பிரதான விமான நிலையத்திலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டனர்.