‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை தொடங்கினார் கமல்ஹாசன்

‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை தொடங்கினார் கமல்ஹாசன்CkTuJHQVEAAU87s_2884945g

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது.

‘தசாவதாரம்’ படத்தில் தோன்றிய பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து உருவாகும் படமே ‘சபாஷ் நாயுடு’. இதில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் சவுரவ் சுக்லா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

“இரண்டு நாயுடுக்களும், ஒரு குண்டுவும் நடிக்கும் முதல் நாள் படப்பிடிப்பு தொய்வின்றி நடக்கிறது. அற்புதமான நடனக்கலைஞர்கள், அற்புதமான படக்குழு” என ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டி.கே.ராஜீவ் குமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனமும், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News