எஸ்கோலா சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் கௌசல்யா மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகனசுந்தரத்தின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பகுதித் தலைவர் கெப்டன் நளின் டி சில்வா மற்றும் சிறப்பதிதியாக ஓய்வுபெற்ற இலங்கை கடற்படை அதிகாரி ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/242162/IMG-20240204-WA0002.jpg)
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/242161/IMG-20240204-WA0000.jpg)
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/242164/IMG-20240204-WA0013_1_.jpg)
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/242163/IMG-20240204-WA0005.jpg)
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/242165/IMG-20240204-WA0042.jpg)