உள்ஆய்வு விசாரனை முடிவில் 14மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதை பொருட்கள் பறிமுதல்
கனடா- அதிநவீன கடத்தல் நெட்வேக் கும்பல் அங்கத்தவர்கள் 27-பேர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2016ஆரம்பத்தில் ரொறொன்ரோ பொலிஸ் மற்றும் யோர்க் பிராந்திய பொலிசார் இணைந்து போதை மருந்து கடத்தல் வியாபாரம் குறித்த புலன்விசாரனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒன்ராறியோவில் முதன்மையாக இருந்த போதிலும் நியுயோர்க் மாநிலத்திலும் செல்வாக்கின் அளவு இருந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுகள் எங்கு எப்போது இடம்பெற்றதென Supt. Gord Sneddon வெளியிடவில்லை.300கிலோகிராம்கள் போதை மருந்துகள்,2.3-மில்லியன் டொலர்கள்களிற்கும் அதிகமான யு.எஸ்.மற்றும் கனடியன கரன்சி மற்றும் எண்ணிக்கையான ஆயுதங்கள் போன்றனவற்றை பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Sneddon கூறியுள்ளார்.
அனைத்தினதும் மதிக்கப்பட்ட தெரு விலை 14-மில்லியன் டொலர்களிற்கும் அதிக பெறுமதியானதாகும்.
இதேசமயம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்:TEC-9 submachine gun with a silencer,வேட்டை துப்பாக்கிகள், எண்ணிக்கையான கைத்துப்பாக்கிகள் ஆகும்.இந்த அமைப்பு மிகவும் அதிநவீனமான ஒரு அமைப்பு எனவும் இந்த கிரிமினல் அமைப்பை தாங்கள் கைப்பற்றி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மற்றய உடமைகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வங்கி கணக்குகள், கொண்டமேனியம்கள் என்பன இவற்றுள் அடங்கும்.
இக்குற்றவியல் அமைப்பின் தலைவன கெவின் எர் ஆவான்.