ஆர்சனிக் விஷம் கலந்த கல் திருடப்பட்டுள்ளது.பொலிசார் எச்சரிக்கை!

ஆர்சனிக் விஷம் கலந்த கல் திருடப்பட்டுள்ளது.பொலிசார் எச்சரிக்கை!

கனடா–விஷம் கலந்த தாதுப்பொருள் ஒன்று டவுன்ரவுனில் திருடப்பட்டு விட்டதாகவும் இதனை தொடவேண்டாம் எனவும் பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர்.
இருதய வடிவம் கொண்ட இக்கல் கிட்டத்தட்ட 8×10 சென்ரிமீற்றர்கள் அளவுடையதுடன் ஆர்சனிக் கொண்டிருப்பதால் பாதுகாப்பு பூச்சு பூசப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சரியான முறையில் கையாளப்பட வில்லையெனில் வெளிப்பூச்சு உடைந்து ஆர்சனிக்கை வெளிப்படுத்தி விடும் இந்த ஆர்சனிக் ஒரு ஆற்றல் மிக்க விஷம். உட்கொள்ள பட்டால் மரணம் விளைவிக்க கூடியது-முக்கியமாக பிள்ளைகளிற்கு என பொலசார் எச்சரித்துள்ளனர்.
இத்தாதுப்பொருள் அக்டோபர் 15 11மணிக்கும் பிற்பகல் 2மணிக்கும் இடையில் களவாடப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-5200 என்ற இலக்கத்தில் அல்லது அனாமதேயமாக கிரைம் ஸ்ரொப்பஸ் 416-222-TIPS (8477).என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News