Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்

August 19, 2021
in News, Sri Lanka News
0
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை – தலிபான்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் மார்ச் 2001ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்களை அழித்ததை கண்டித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இந்த நிலையில், தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் தற்போது உள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தினார் என  அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என அவர் கூறியதாகவும் தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள் என அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

ஆதவன் ஊடகத்தில் வெளியான செய்தியை நன்றியுடன் பிரசுரிக்கிறோம். ஈஸி24நியூஸ் இணையத்தளத்தின் கருத்து எதுவும் இச் செய்தியில் இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.

(பொறுப்பு துறப்பு)

Previous Post

நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா? ஜனாதிபதி செயலகம் கூறிய விடயம்

Next Post

ஆசிரியர் சம்பள முரண்பாடு ; நிதியமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

Next Post
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரியர் சம்பள முரண்பாடு ; நிதியமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures