Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

SLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை

September 21, 2019
in News, Politics, World
0

புதிய கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இறுதியானதாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

இக்கட்சியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் புதுவடிவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இந்த இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பவற்றுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளார். எஞ்சியிருப்பது சொற்ப காலம் என்பதனால், தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் அரசியல் மட்டத்திலும், கட்சிக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இரு கட்சிகளும் ஒரே குடும்ப பின்னணியைக் கொண்டவை என்பதனால், இரு கட்சிக்குள்ளும் இணைவதற்கு எந்தவித தடையும் கிடையாது என பொதுவாக கருத்துக்கள் கூறப்படுகின்றன. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்ரமரத்ன, குமார வெல்கம போன்றோரும், சமல் ராஜபக்ஸ, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, மஹிந்த ராஜபக்ஸ போன்றோரும் இக்கருத்தை கூறிவருகின்றனர்.

பொதுஜன பெரமுனக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஆரம்ப கட்டங்களில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாபஸ் வாங்கியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டும், கட்சியின் பொதுச் சின்னமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்தையோ, வேறு ஒரு சின்னத்தையோ ஏற்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் ஆரம்ப கட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இப்போது, அவை எதுவும் சரிப்படாத நிலையில் காணப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த நிபந்தனைகளை பொதுஜன பெரமுனவுடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கையாகவே பார்த்தனர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள பொதுஜன பெரமுன கட்சிதான் ஜனாதிபதித் தேர்தலை முகம்கொடுக்கவும் தகுதியான கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஒரு சிறு கட்சிபோன்று வந்து இணைந்துகொள்ளலாமே தவிர பாரியளவில் விட்டுக் கொடுப்புக்களை வழங்கும் அளவுக்கு பேரம் பேச முடியாது எனவும் பொதுஜன பெரமுன கட்சியின் சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ள மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்தது. இதற்காக வேண்டி அக்கட்சி மாவட்ட கூட்டங்களை திட்டமிட்டது. இதன் முதலாவது கூட்டம் இரத்தினபுரியில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் இதுவரை நடாத்தப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த தீர்க்கமான தீர்மானங்கள் இல்லாத நிலையில் கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஊர் மட்ட ஆதரவாளர்களுக்கும் முகம்கொடுக்க முடியாத ஒர் இக்கட்டான நிலையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா போன்றோர் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்துப் போட்டியிடவும் முடியாது, கூட்டணி அமைக்கவும் இயலாது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளதாக எதிர்த் தரப்பினரால் விமர்சிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

சின்னத்தை மாற்றினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. பிடிவாதமாக கருத்து வெளியிட்டு வருகின்றார்.

நேற்று முன்தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவினால் கோட்டாபயவின் ஜனாதிபதி வேட்பாளர் சின்னம் தாமரை மலர் மொட்டுத் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் வெளிவரும் வரையில் இந்தப் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், அவருடன் இணைந்து பலமான கூட்டணியை கட்டியெழுப்பலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நம்புவதாகவும், இதனாலேயே ஒவ்வொரு சாத்தியப்படாத நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதாகவும் கம்மம்பில எம்.பி. சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

பேச்சுவார்த்தை வெற்றியளித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சரத் அமுனுகம எம்.பி. இந்தக் கருத்தை வெளிப்படையாகவே அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு சிந்தனைப் போக்குள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்டத்திலுள்ளவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவையை நன்கு அறிந்து செயற்பட்டு வருவதாகவும், அதிலுள்ள கனிஸ்ட உறுப்பினர்களே செய் நன்றி மறந்தவர்களாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

தமது தயவினால்தான் பொதுஜன பெரமுன கட்சியுடன் உள்ள பலரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதாக ஜனாதிபதி பல கூட்டங்களில் கூறிவருகின்றார். பொதுஜன பெரமுனவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவையடுத்து, ஜனாதிபதி அதிரடித் தீர்மானமொன்றை எடுத்து தன்னிடமுள்ள துரும்பைப் பயன்படுத்தினால், பலரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிபோகும் நிலைமை உருவாகலாம் என்று அரசியல் கள அறிவுள்ள ஒருவரின் உள்ளத்தில் எழும் யோசனைக்கு மட்டும் மதில் கட்ட முடியாது.

Previous Post

ஐ.தே.கட்சியின் தீர்மானம் குறித்து சஜித் கருத்து

Next Post

 பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

Next Post

 பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures