எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00மணிக்கு ஸ்காபுறோ சண்டனி கிரன்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ள ” சித்திரகீதம்” இசை நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் “அன்னை தந்த இல்லம்’ நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது கனடாவில் இயங்கிவரும் “அன்னை தந்த இல்லம்’ குழுவினரால் நடத்தபபடுகின்றது. நிகழ்ச்சியில் தனது இனிதான குரலால் அனைவரையும் கவரவும் அங்கக் குறைபாடு உள்ளவர்களின் நலன் பேணும் வகையில் உணர்வுபூர்வமாக இணைந்து அவர்களுக்காக அதிக பட்ச நிதியைச் சேகரிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பான விபரங்களை இங்குள்ள ஊடகவியலாளர்களுக்கு அறியத்தரும் முகமாக இன்று மாலை ஸ்காபுறோவில் கென்னடி வீதியில் உள்ள கென்னடி கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபபட்டிருந்த சந்திப்பில் “சின்னக்குயில்” சித்திரா அம்மையாரும் கலந்து கொண்டார். ஏராளமாக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். “சின்னக்குயில்” சித்திரா அம்மையார் அங்கு மனந்திறந்து உரையாற்றுகையில் இவ்வாறான அங்கக் குறைபாடு உள்ளவர்களினதும் அவர்கள் குடும்பத்தினரினதும் வலியை அவர்களே முதலில் அறிவார்கள். எனவே அவர்களது தேவையை உணர்ந்தும் அவர்களது வலிகளுக்கு மரியாதை செய்தும் உதவவேண்டியது மிக அவசியம் என்று தெரிவித்தார்.