Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ATM இயந்திரங்களில் தொடர் கொள்ளை | இரு வெளிநாட்டவர்களை தேடும் சி.ஐ.டி.

January 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ATM இயந்திரங்களில் தொடர் கொள்ளை | இரு வெளிநாட்டவர்களை தேடும் சி.ஐ.டி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச வங்கியொன்றின் காலி பிராந்தியத்தில் உள்ள மூன்று தானியக்க பணப்பறிமாற்று இயந்திரங்களை முடக்கி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய, இரு வெளிநாட்டவர்களை உள்ளடக்கியதாக நம்பப்படும் இந்த கொள்ளைக் கும்பளை அடையாளம் கண்டு கைது செய்யும் பொறுப்பு சி.ஐ.டி. சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பகுதியில் கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கும் அதிகாலை 3.40 மணிக்கும் இடையே இந்த கொள்ளை இடம்பெற்றிருந்தது.

இதுவரையான விசாரணைகளில், கார் ஒன்றில் வரும் கும்பலில் உள்ளடங்கும் இரு வெளிநாட்டவர்களின் உருவ அமைப்பை ஒத்தவர்கள் இருவர் மட்டும் இறங்கிச் சென்று, சிறிய தொழில் நுட்ப கருவி ஒன்றினை தானியக்க பணப் பரிமாற்று இயந்திரப் பகுதியில் பொருத்தி, கட்டமைப்பை ஹெக் செய்து அதில் உள்ள அனைத்து பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தானியக்க பணப் பறிமாற்று இயந்திரத்தில் பணத் தொகையை பெற முடியாமல் இருப்பது தொடர்பிலும், கட்டமைப்பில் பணம் இயந்திரத்தில் இருப்பதாக காண்பித்த நிலையும், அது தொடர்பில் தேடிப் பார்த்த போதே இக்கொள்ளை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில், மேலதிக விசாரணைகளில், கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை அதே அரச வங்கியின் நாரஹேன்பிட்டி கிளையிலும் வெளிநாட்டவர்கள் இருவர் என சந்தேகிக்கப்படுவோர் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தில் கொள்ளையிட முயற்சித்துள்ளமை குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் அது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.

காலி சம்பவம் தொடர்பிபில் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், இந்த வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய கொள்ளை கும்பல் கொள்ளைக்காக வந்த கார், கம்பஹா பகுதியில் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அது வாடகைக்கு வழங்ககப்பட்டிருந்த நிலையில் கொள்ளைக் கும்பலால் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கத் தகடும் மாற்றப்பட்டு கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனைவிட, அம்பலாங்கொடை பகுதியிலிருந்து அதிவேக பாதை ஊடாக கொள்ளையர்கல் வந்துள்ளமை தொடர்பிலும் முதலில் ஹிக்கடுவை பகுதியில் உள்ள தானிக்க பணப் பரிமாற்று இயந்திரத்தை டிசம்பர் 30 அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பின்னர், காலி – கராபிட்டிய தானியக்க பணப் பரிமாற்று இயந்திரம் அதிகாலை 3.22 மணிக்கும் அதனை தொடர்ந்து பந்தேகம இயந்திரமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இக்கொள்ளைகளின் போது நேரடியாக தானியக்க பணப் பறிமாற்று இயந்திரங்களுக்குள் நுழையும் இரு வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் நபர்களும் முகத்தை மறைக்கும் முகக் கவசமும் , தொப்பியும் அணிந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Previous Post

துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

Next Post

விரைவில் ஆப்கானில் பெண்கள் சுவாசிப்பதற்கான உயிர்வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்படும் | சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி

Next Post
விரைவில் ஆப்கானில் பெண்கள் சுவாசிப்பதற்கான உயிர்வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்படும் | சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி

விரைவில் ஆப்கானில் பெண்கள் சுவாசிப்பதற்கான உயிர்வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்படும் | சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

May 11, 2025
7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

May 11, 2025
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025

Recent News

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

May 11, 2025
7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

May 11, 2025
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures