Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்க போய் தவறாக லீக்கானதா கொரோனா!!

April 20, 2020
in News, Politics
0

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போய் கொரோனா வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் மருத்துவர் லுக் மோன்டேக்னியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 2,407,562 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 165,082 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் பல்வேறு நாடுகள், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளனர். அமெரிக்காவும் இது தொடர்பாக விசாரிக்க உள்ளது.

கொரோனா வைரஸ் என்பது பயோ ஆயுதமாக கண்டிப்பாக உருவாக்கப்பட்டு இருக்காது என்று பல நாடுகள் தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் வுஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

1990 களில் இருந்து வுஹன் ஆராய்ச்சி மையம் பல்வேறு வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அங்கு வைரஸ் தொடர்பாகவும் அதற்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

அதேபோல் வௌவால்களிலும் அங்கு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. வௌவால்களில் காணப்படும் கொரோனா குடும்பத்தின் வைரஸ்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.

வுஹனில் இருக்கும் மத்திய வைரலாஜி ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2000ம் வருடத்தில் இருந்தே கொரோனா தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இங்கு இருக்கும் பி4 என்ற சோதனை கூடத்தில்தான் கொரோனா தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கிறது

இங்குதான் மிக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வைரஸ் கிருமிகள் லீக்காவது மிகவும் கடினமான விஷயம் ஆகும்.

இந்த நிலையில் இங்கிருந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கலாம்.

கவனக்குறைவு காரணமாக இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம். இந்த வைரஸ் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் கொரோனா மூலம் தாக்கப்பட்ட முதல் நபர் என்ற தியரி தற்போது உலவி வருகிறது.

இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பிரபலமான வைரலாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் மருத்துவர் லுக் மோன்டேக்னியர், இந்த வைரஸின் தோற்றம் குறித்து கூடுதல் தகவல்களை அவர் வெளியிட்டார்.

2008ம் ஆண்டு முதல் முதலில் எய்ட்ஸ் நோயை உருவாக்கிய எச்ஐவியை கண்டுபிடித்தது இவர்தான். இதை கண்டுபிடித்ததற்காக 2008ல் அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து அவர் அளித்து இருக்கும் பேட்டியில், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க போய் அதன் மூலம் இந்த கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று, கொரோனா, மலேரியா வைரஸ்களை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். அதன்மூலம் இந்த புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்.

அந்த சோதனை கூடத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கலாம். இந்த புதிய கொரோனா வைரஸில் எச்ஐவி வைரஸ்கள் மற்றும் மலேரியா வைரஸ்களின் ஜீன்கள் இருக்கிறது. அதனால் இதை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று புதிய கொரோனா வைரஸ். இது எப்படி வெளியானது என்று விசாரிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆபத்து தொடரும் என்று லுக் மோன்டேக்னியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரின் இந்த புதிய சந்தேகம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

17 பேரை சரமாரியாக சுட்டு தள்ளிய மர்ம நபர்

Next Post

வாட்ஸ் அப் குழுமூலம் மக்களுக்கு உதவ களமிறங்கிய அணி !

Next Post

வாட்ஸ் அப் குழுமூலம் மக்களுக்கு உதவ களமிறங்கிய அணி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures