Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

64 பேருக்கான கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது

April 18, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேரின் இரத்த மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தோற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த.சத்யமூர்த்தி இதற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்பாணத்தில் இடம்பெற்ற குறித்த மத ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கின்றதா என சோதனை செய்வதற்கான இரத்த மாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணிகளே நேற்றயதினம் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட 14 பேரிடம் குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டதுடன் அவை மேலதிக ஆய்வுகூட பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு  அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

குறித்த இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்களில் எவருக்கும் கொரோனா  தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 50 பேரிடம் நேற்று  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.  பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 30 பேரிடமும் கிளிநொச்சியைச் சேர்ந்த 11 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேர், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவரும் என 9 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த 50 பெரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு!

Next Post

கொழும்பில் ‘கொரோனா’ தொற்று 55 ஆக அதிகரிப்பு

Next Post

கொழும்பில் 'கொரோனா' தொற்று 55 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures