நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வெப்பமான காலநிலை நிலவக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

