Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் இன்னும் நிவாரணம் இல்லை – பட்டினி நிலை

March 31, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசின் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

நலன் விரும்பிகள் ஊடாக ஆங்காங்கே சிலருக்கு உதவிப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆகக் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் அறிக்கையிடப்பட்டபோதும் இதுவரை அரசு எந்தவொரு நிதி உதவியோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை என்று மாவட்ட செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு பி.ப. 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு தடவைகள் கால வரையின்றி ஊடரங்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அன்றாடம் தொழில் செய்வோர் மற்றும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

சுமார் 76 ஆயிரம் பேர் யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி பெறுகின்றனர். அதனை விட 11 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி உதவி தேவை. இவர்களிருந்து உடனடித் தேவையுள்ளோராக 60 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபா தேவை என்று மாவட்ட செயலகத்தால், தேசிய வறுமை ஒழிப்புச் செயலணி மற்றும் ஜனாதிபதி விசேட செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை.

மேலும் இடர்முகாமைத்துவ அமைச்சால் மாவட்டத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி நிவாரண உதவிக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தபோதும் அதற்கு அரச உயர்மட்டங்கள் பச்சைக்கொடி காட்டவில்லை.

அந்த நிதியை நிவாரணத்துக்குச் செலவிட முடியாது என்று அறிவித்துள்ளன.

இதனைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியபோது ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்ட போதிலும் அந்த நிதியும் இதுவரை மாவட்ட செயலகத்துக்குக் கிடைக்கவில்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் எந்தவொரு மாவட்டத்துக்கும் இதுவரை அரசின் எந்தவொரு நிதி உதவியும் கிடைக்கவில்லை.

Previous Post

கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாது!

Next Post

மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி

Next Post

மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures