அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலத்தை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
இந்நிலையில், இன்று தொடக்கம் எதிர்வரும் 3 நாட்களுக்கு அரசாங்கத்தினால் விசேட விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக குறித்த விண்ணப்பங்கள் ஏற்கும் திகதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

