Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ. நா . இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியது மக்களுக்காகவே – ஜி.எல்.பீரிஸ். தெரிவிப்பு

February 28, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியது. இது சர்வதேச அரங்கில் நாட்டு மக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ். தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும் இறையான்மைக்கும் முற்றிலும் முரணானவையாகும்.

 

தீர்மானங்களிலுள்ள சில பரிந்துரைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் காணப்பட்டன. இவை கடந்த காலங்களில் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தின.

 

இலங்கையின் உள்ளக விவகாரங்களின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான பரிந்துரைகளாக பொலிஸ் மற்றும் இராணுவ சேவை மீள் திருத்தம், காணி விடுவிப்பு, அதிகாரப் பகிர்வு, பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் திருத்தம், குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கல் உள்ளிட்ட 20 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டன.

 

இந்தப் பரிந்துரைகள் அடங்கிய தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமை தேசத் துரோக செயற்பாடாகும்.

 

நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அனுமதியை நல்லாட்சி அரசு 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வழங்கியது.

 

ஆனால், இந்தச் சபை நடுநிலையாகச் செயற்படும் அமைப்பாகக் காணப்பபடவில்லை.

 

2017ம் ஆண்டு வல்லரசு நாடான அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையைக் கடுமையாக விமர்சித்து அதிலிருந்து விலகியமை அந்தச் சபையின் சுயாதீனத்தன்மை தொடர்பான தன்மையை வெளிப்படுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்திய மல்லிகைக்கும் அல்வாவுக்கும் யாழ்ப்பாணத்தில் தடை

Next Post

கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் – விசாரணை

Next Post

கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் - விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures