Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு ஆரம்பம்

February 16, 2020
in News, Politics, World
0

பெரும்போக நெல் அறுவடையையடுத்து அரசாங்கத்தின் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டமையினால் விவசாயிகளை தனியார் வர்த்தகர்கள் சுரண்டும் நிலை தற்போது இல்லை என்று ராஜாங்க அமைச்சர்ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை கண்டறிவதற்காக கடந்த 12 ஆம் திகதி தலாவ கட்டிடத்தொகுதிக்கு விஜயம் செய்த போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதற்தடவையாக இம்முறை ஈரத்தன்மையுடைய நெல்லை ஆகக்கூடிய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதினால் விவசாயிகள் பாரிய அளவில் நன்மையடைந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் நெற்கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் சந்தேகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.தாமதங்கள் ஏற்படுமாயின் அதுபற்றி அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தூரப்பிரதேசங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

நெற்கொள்வனவிற்கென அரசாங்கம் முதற்கட்டமாக 383 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..

Previous Post

மத்திய அதிவேகப் பாதைகளை துரிதமாக நிர்மாணிக்க ஜனாதிபதி பணிப்பு

Next Post

வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள்

Next Post

வாக்காளர்கள் வெட்கப்படும் நிலைமைக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures