Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி பய­ணிப்­பதே வர­லாறு கற்­றுத்­தந்­துள்ள பாடம்

February 4, 2020
in News, Politics, World
0
இன, மத, குல பேத­மின்றி நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக தம்மை அர்ப்­ப­ணித்த அனை­வ­ருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்­கப்­பெற வேண்டும் என தெரி­வித்­தி­ருக்கும் எதிர்க்­கட்சித்தலைவர் சஜித்  பிரே­ம­தாச ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி  பய­ணிப்­பதே வர­லாறு கற்­றுத்­தந்­துள்ள பாடம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.
72  ஆவது  சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தியில்  இதனை  தெரி­வித்­தி­ருக்கும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:
சகல பேதங்­க­ளையும் மறந்து எல்­லோரும் ஒன்­றி­ணைந்து கூட்­டான  போராட்­டத்தின் பெறு­பே­றாக 1948  ஆம் ஆண்டில்  இலங்கை  கால­னித்­துவ  ஆட்­சியின்  கோரப்­பி­டி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெற்­றது. 72 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நாம் பெற்ற அந்த சுதந்­தி­ரத்தை இன்­றைய தினம் பெரு­மி­தத்­துடன் கொண்­டா­டுவோம்.
சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல­த­ரப்­பட்ட போராட்­டங்­களின்போது உயிர்த்­தி­யாகம் செய்த போரா­ளி­களை  இச்­சந்­தர்ப்­பத்தில் மிகவும் பெரு­மை­யு­டனும்  கௌர­வத்­து­டனும் நினைவுகூருதல் வேண்டும். அவர்­க­ளு­டைய உயிர்மூச்சு இந்த நாட்டின் சிரேஷ்ட வர­லாற்றின் அதி உன்­னத குறிப்­புக்­க­ளாகும்.
இன, மத, குல, சாதி போன்ற  பேதங்­க­ளின்றி  ஒன்­றாக  இணைந்து இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக  அர்ப்­ப­ணித்­துள்ள  அனை­வ­ருக்கும்  தேசத்தின்  கௌரவம்  கிடைக்­கப்­பெ­றுதல் வேண்டும்.
வர­லாறு எமக்கு  கற்­றுத்­த­ரு­கின்ற  பாட­மாக  இருப்­பது  ஒற்­று­மை­யுடன்  முன்­னோக்கி  பய­ணிப்­ப­தை­யே­யாகும்.  எனினும், நாடு என்ற  வகையில்  பெற்­றுக்­கொண்ட  வெற்­றிகள், அடைந்த  பின்­ன­டை­வுகள்  மற்­று­மல்­லாது தோல்­விகள்  போன்­ற­வற்­றைத்­தாண்டி கடந்துசென்ற  72 வரு­டங்­களின்  போது எமக்கு பல்­வே­று­பட்ட  அனு­ப­வங்­களை  வழங்­கு­கின்­றது.
முற்­போக்கு சிந்­த­னை­யோடு அபி­மா­ன­மிகு  வர­லா­றொன்­றைக்­கொண்ட  நாடொன்­றாக  உல­கிற்கு  முன்­மா­தி­ரி­யொன்றை  வழங்­கி­யுள்ள இலங்­கை­யா­னது  தற்­பொ­ழுது அர­சியல்  சந்­தர்ப்­ப­வா­தத்­திற்கு   இரை­யாக்­கப்­பட்ட  பலி­பீ­ட­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.  அவ்­வாறு  நோக்கும்போது  கால­னித்­துவ  ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­த­மை­யைத்­த­விர  இந்­நாட்டு மக்கள் அடைந்துகொள்ள  இன்னும்  அனேக  விட­யங்கள் இருக்­கின்­றன.
அர­சியல்  பழி­வாங்­கல்கள் இல்­லாத  நாடொன்று, பொரு­ளா­தார, அர­சியல்,  கலா­சார  மற்றும் சிவில்  சுந்­தி­ரத்­தைப் ­பா­து­காப்­ப­தற்­கான சுபீட்­சம்­மிகு நாடொன்று, உலகில்  கௌர­வத்­துடன் தலை­நி­மிர்ந்து  நிற்­க­க்கூ­டிய  நாடொன்றை  உருவாக்குவதற்கான போராட்டம்  இன்னும்  முடியவில்லை.
அந்நோக்கத்திற்காக எல்லா  நேரங்க ளிலும் அர்ப்பணிப்புச் செய்யும்  உயர் அபிலாசைகள்  நிறைந்த, கௌரவமான சுதந்திர தினமொன்றுக்காக  முழு நாட்டுக்கும்  பிரார்த்திக்கின்றேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.
Previous Post

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 72வது சுதந்திர தின நிகழ்வுகள்

Next Post

முதல்முறையாக இராணுவ பதக்கத்துடன், கலந்துகொண்ட ஜனாதிபதி

Next Post

முதல்முறையாக இராணுவ பதக்கத்துடன், கலந்துகொண்ட ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures